Wednesday 27 July 2011

ஹிட்லர் - ஒரு சாது, மேதையாகி, மிருகமாய் இறந்த உண்மை..



                 மிகப் பெரிய பொருளாதார நிபுணராக உலக மக்களால் நினைவு கூறப்பட்டிருக்க வேண்டியவர் ஹிட்லர்.. உள்ளிருந்த மிருகம் முழித்து கொண்டதால் கொடூர மிருகமாக அறியப்படுகிறார்.. நிச்சயமாக நான் ஹிட்லரை புகழ்பவனோ, இகழ்பவனோ கிடையாது.. படித்ததை பகிர்ந்திட நினைக்கிறேன்.. 
               சாதுவாக வளர்ந்து, வேலை இல்லாமல் திரிந்து, உருப்படாமல் போக இருந்தவன், முதல் உலக போரின் போது ராணுவத்தில் சேர்ந்து, சிறிய கட்சியில் சேர்ந்து, திறமையால் ஆட்சியை பிடித்து, ஜெர்மனியின் பொருளாதார தரத்தை உயர்த்திய மேதையாக திகழ்ந்ததும், உள்ளிருந்த மிருகம் விழித்து கொண்ட காரணத்தால் கொடூர மனித வேட்டையாடும் ஓநாயாக மாறி, போரில் தோற்று , கடைசியில் மனநிலை பாதிக்க பட்டவனாக மற்றவர்களால் பரிதாபமாக பார்க்கப்பட்டு, மனம் திருந்தாமலேயே காதலியுடன் உயிரை மாய்த்துக் கொண்டது, யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத ஒன்றாகும்.. 
          சமீபத்தில் ஹிட்லரை பற்றிய சில துணுக்குகளை மதனின்(கார்டூனிஸ்ட்) 'மனிதனுக்குள்ளே மிருகம்' என்ற நூலில் படித்தேன்.. மேலே கூறியது நான் படித்ததின் சுருக்கம்.. விரிவாக பகிர்ந்து கொள்ள எனக்கு ஆசை.. தொடர்ந்திடலாமா என உங்களின் கருத்தை கேட்கிறேன்... 

No comments:

Post a Comment